கிரகனாதி கிரகனன்களுக்கு அப்பலுமே ஒரு அசகாய சக்தி உண்டாம்,
ஆளுக்கு ஆள் ஒரு போளிபரை கிறிக்கியும் யாருக்கும் விளங்காததாம்,
அதை பயந்ததை தொழுவதை துதிப்பதை வந்தி பிரிதேதும் வழி இல்லையாம்,
நாம் செய்த வினையெல்லாம் முன் செய்ததேன்றது விதி ஒன்று செயவித்ததாம்,
அதை வெல்ல முனைவோரை சதிகூட செய்தது அன்போடு ஊழ் சேர்க்குமாம்,
குருடாக செவிடாக மலடாக முடமாக கருசேர்க்கும் திருமுலமாம்,
குஷ்ட குஸ்யம் புற்று சூலை மூலம் என்ற க்ருரங்கள் அதன் சித்தமாம்,
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின் புது ஜென்மம் தந்தருள்மாம்,
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருத்தாமல் சோதித்து கதி சேர்க்குமாம்,
ஏழைக்கு வரு துயரை வேடிக்கை பார்பததன் வாடிக்கை விளையாடலாம்,
நேர்கின்ற நேர்வெல்லாம் நேர்விக்கும் நாயகம் போர் கூட அதனின் செயலாம்,
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னற்கு தரணிதந்தது காக்குமாம்,
நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர்தேற்றி அல்குலின் சினை சேர்க்குமாம்,
அசுரரை பிளந்த போல் அணுவையும் பிளந்தது அணுகுண்டு செய்வித்ததும்,
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை பலகாரம் செய்துண்டதும்,
பிள்ளையின் கறி உண்டு நம்பினாற்கு அருள்திடும் பரிவான பரபிரம்மமே,
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்த வரம் உளமார தொளுசக்தியை,
மற்றவர் வையும் பயம் கொண்டு நீ போற்றிடு அற்றத்தை உண்டென்று கொள்,
ஆகமகுளம் மூழ்கி மும்மலம் கழி அறிவை ஆத்திக சலவையும் செய்,
கொட்டித்து போற்று மணியடித்து போற்று கற்பூர ஆரத்தியை,
தையடா ஊசியிர் தையென தந்தபின் தக்கத்தை தையாதிரு,
ஊய்திடும் மெய்வழி உதாசினித்தபின் நைவதே நன்றேனின் நை.













































